/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை கடத்தியவர் கைது
/
போதை மாத்திரை கடத்தியவர் கைது
ADDED : நவ 27, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: போதை மாத்திரை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக - ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில். நேற்று மாலை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது. அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில். 80 கிராம் பெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை இருந்தது தெரிந்தது.
இது தொடர்பாக, கார் ஓட்டுநரான மடிப்பாக்கம் முகமது அப்துல்ஆஷா, 28, என்பவரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

