sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை

/

பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை

பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை

பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை


ADDED : ஜன 13, 2025 03:23 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:வெள்ளவேடு அடுத்த திருமழிசை பேரூராட்சியில், 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்துள்ள மூன்று பழைய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாடில்லாமல் உள்ளன. இந்த கட்டடத்தை இடித்து அகற்றாததால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதில், பள்ளி வகுப்பறைக்குள் விஷ ஜந்துகள் வருவதால், மாணவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம், சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்து பழுதடைந்து, பயன்பாடில்லாத வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறுகையில், “திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்து, பாழடைந்து மோசமான நிலையில் உள்ள வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us