/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
/
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
ADDED : ஜன 03, 2024 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 80. இவர், சில மாதங்களாக உடல்நிலை பாதித்தும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.