ADDED : ஜன 16, 2025 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எட்டியப்பன், 80; இவர், கடந்த 9ம் தேதி வீட்டில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, நிலை தடுமாறி விழுந்தார்.
இதையடுத்து, உறவினர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதித்தனர். அங்கு, முதலுதவிக்குப்பின், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அங்கு, நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது மகன் ராஜி அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.