/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடு மீது ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
/
மாடு மீது ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
ADDED : அக் 25, 2025 09:26 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே மாடு மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, புண்டரீகபுரம் கிராமம். இங்கு, குண்டு தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி, 70; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.
இவர், கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணியளவில், திருவாலங்காடு பஜாருக்கு 'ஹோண்டா ஸ்கூட்டி' வாகனத்தில் சென்றார். திருவள்ளூர் ---- அரக்கோணம் நான்கு வழிச்சாலையில், புண்டரீகபுரம் அருகே குறுக்கே வந்த மாடு மீது ஸ்கூட்டர் மோதியதில், ராமமூர்த்தி பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்ட வாகன ஓட்டிகள், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

