/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
/
பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜூலை 27, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த சேலை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ், 80. இவரது மனைவி அன்னபுஷ்பம், 70. இவர், கடந்த 22ம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரது வலது காலில் கடித்தது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.