ADDED : ஏப் 09, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா, 56. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் டீ குடித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.