/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
ADDED : மே 10, 2025 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே சென்னங்காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்காளம்மாள், 60. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், இவரது உறவினர் லோகேஷ் என்பவருடன் பைக்கில், மருத்துவரை பார்க்க சென்றார்.
தொம்பரம்பேடு கிராமம் அருகே சென்ற போது, செங்காளம்மாள் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர், ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.