sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அவதியுறும் மின் ஊழியர்கள்

/

கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அவதியுறும் மின் ஊழியர்கள்

கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அவதியுறும் மின் ஊழியர்கள்

கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அவதியுறும் மின் ஊழியர்கள்


ADDED : ஏப் 08, 2025 12:19 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,

மின் வாரியத்திற்கு சொந்தமான கம்பங்கள், சிமென்ட், இரும்பு கலவையால் செய்யப்பட்டவை. அவற்றில் எந்நேரமும் மின்சாரம் செல்வதால், ஊழியர்கள் தவிர்த்து வேறு யாரும் தொடுவதற்கு கூட அனுமதி கிடையாது.

இந்நிலையில், திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட கம்பங்கள் அமைத்து, மின்வாரியம் மின் வினியோகம் செய்கிறது. இந்த மின்கம்பத்தில், சில தனியார் கேபிள் 'டிவி' நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் ஒயர்களை, அனுமதி இன்றி மின்வாரிய கம்பங்களில் இணைத்து எடுத்து செல்கின்றன.

முக்கிய சந்திப்புகளில் உள்ள கம்பங்களின் மேல், கேபிள் ஒயர்கள் சுருட்டி கட்டப்பட்டுள்ளன. இதனால், கம்பங்களில் பழுது ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்காக ஊழியர்கள் ஏறும் போது, ஒயர்கள் காலில் சிக்கி, கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வெளிநபர் கம்பம் மேல் ஏறுவதால், மின் விபத்து ஏற்படுகிறது.

எனவே, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விபத்தை தடுக்க கம்பங்களில் அனுமதியின்றி கட்டியுள்ள கேபிள் 'டிவி' ஒயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us