/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மயங்கி விழுந்த எலக்ட்ரிஷியன் பலி
/
மயங்கி விழுந்த எலக்ட்ரிஷியன் பலி
ADDED : ஆக 01, 2025 12:52 AM
திருவள்ளூர்:தனியார் கம்பெனி எலக்ட்ரிஷியன் மயங்கி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் ம.பொ.சி. நகரைச் சேர்ந்தவர் தணிகைவேலு, 58. கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு உணவு சாப்பிட வந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.