/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 11, 2025 12:25 AM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், கூர்மவிலாசபுரம் ஊராட்சியில், கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு துவக்கப் பள்ளி.
இந்த வளாகத்தில், தபால் நிலையம், ஊராட்சி அலுவலகம், நுாலகம் என, ஒருங்கிணைந்த வளாகத்தில் பள்ளி அமைந்துள்ளது. இந்த வளாகத்தை சுற்றி, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுச்சுவரை சமூக விரோதிகள் சிறுக சிறுக உடைத்ததால், தற்போது சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் நிகழும் வாய்ப்பும் உள்ளதால், பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஒருங்கிணைந்த பள்ளி வளாக சுற்றுச்சுவரை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.