/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?
/
ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?
ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?
ஆக்கிரமிப்பு கட்டுமானம்: தாசில்தார் கவனிக்காதது ஏன்?
ADDED : ஜூலை 09, 2025 02:33 AM

கும்மிடிப்பூண்டி:சார் - பதிவாளர் அலுவலகம் அருகே, புதிதாக முளைத்துள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகம் அருகே, தாசில்தார் அலுவலக வளாக சுவரை ஒட்டி, இரு மாதங்களுக்கு முன் தனியார் சார்பில் புதிதாக 'ஹாலோ பிளாக்' கட்டடம் கட்டப்பட்டது.
இந்த இடம், பாப்பான்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட, சர்வே எண்: 319/4ல் உள்ள மயானம் வகையை சேர்ந்தது என, தாசில்தார் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாசில்தார் அலுவலக வளாக சுற்றுச்சுவரை ஒட்டி ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே ஏன் தாசில்தார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகுதிமக்கள் முன்வைக்கின்றனர்.
புதிதாக முளைத்துள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற தவறினால், மேலும் பல ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவதற்கு வழிவகுக்கும்.
எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

