sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

/

குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு


ADDED : ஜன 12, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

தலக்காஞ்சேரியில் குவிந்துள்ள குப்பையை அவ்வப்போது தீ வைத்து கொளுத்துவதால் ஏற்படும் புகையால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.

திருவள்ளூர் நகராட்சியில், தினமும், மட்கும், மட்காத குப்பை என, 35 டன் குப்பை சேருகிறது. இதை நகராட்சி மற்றும் தனியார் துப்புரவு ஊழியர்கள் வீடுதோறும் சென்று பெற்று வருகின்றனர்.

இந்த குப்பை அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்படுகிறது. நகரில் அதிகரித்து வரும் குப்பையை கொட்ட இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், நகரில் சேகரமாகும் குப்பையை தனியார் துப்புரவு ஊழியர்கள் தலக்காஞ்சேரியில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். அவ்வப்போது, அந்த குப்பையை தீவைத்து கொளுத்துவதால், அப்பகுதி முழுதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவ - மாணவியருக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் தலக்காஞ்சேரியில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை 'பயோமைனிங்' முறையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன், அழிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us