sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி - சித்துார் ரவுண்டானாவில் மரக்கன்று நட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு

/

திருத்தணி - சித்துார் ரவுண்டானாவில் மரக்கன்று நட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு

திருத்தணி - சித்துார் ரவுண்டானாவில் மரக்கன்று நட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு

திருத்தணி - சித்துார் ரவுண்டானாவில் மரக்கன்று நட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு


ADDED : செப் 28, 2025 11:28 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி- சித்துார் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தணி - சித்துார் நெடுஞ்சாலை செங்குந்தர்நகர் பகுதியில், திருவள்ளூர், சென்னை, திருப்பதி, சோளிங்கர், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களுக்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்கள் பிரிந்து செல்கின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்து வந்தன. இதை தடுக்கும் வகையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், 1.65 கோடி ரூபாய் மதிப்பில் ரவுண்டானா அமைத்தனர்.

ரவுண்டானா பகுதியில், சாலைகள் பிரியும் பகுதியில் இடையே தடுப்பும் ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது குடிக்கின்றனர். எனவே தடுப்பு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us