/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க 30 வரை அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க 30 வரை அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க 30 வரை அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க 30 வரை அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 21, 2024 09:06 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க வரும் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் 1,000 முதல்வர் மருந்தகம் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரும் 30 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.