/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடங்கு பூட்டை உடைத்து விவசாய உபகரணங்கள் திருட்டு
/
கிடங்கு பூட்டை உடைத்து விவசாய உபகரணங்கள் திருட்டு
ADDED : ஜன 26, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், வினோதினி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் கிடங்கு உள்ளது. இங்கு, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, மேல்பாக்கத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், 46, என்பவர், வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் கிடங்கில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ஜனார்த்தனன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.