ADDED : செப் 21, 2024 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,:வெங்கல் அடுத்த செம்பேடு கிராமம், சின்ன தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி, 52. விவசாயி. கடந்த, 19ம் தேதி திருக்கணஞ்சேரியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு இரவு காவலுக்கு சென்றார். அங்கு உறங்கிக் கொண்டு இருந்தபோது, பாம்பு கடித்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.