sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியங்கள் வழங்கணும் விவசாயிகள் தீர்மானம்

/

 கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியங்கள் வழங்கணும் விவசாயிகள் தீர்மானம்

 கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியங்கள் வழங்கணும் விவசாயிகள் தீர்மானம்

 கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியங்கள் வழங்கணும் விவசாயிகள் தீர்மானம்


ADDED : நவ 22, 2025 02:06 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு, மாநில பொருளாளர் பெருமாள் தலைமையில், நேற்று திருத்தணியில் நடந்தது. இந்த கூட்டத்தில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும். கரும்புக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை, 170 கோடி ரூபாயில் நவீனப்படுத்த வேண்டும். எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி செய்யும் வகையில், ஆலையை தரம் உயர்த்த வேண்டும். 1 டன் கரும்புக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.

எனவே, சாகுபடி பரப்பை அதிகரிக்க, விவசாயிகளுக்கு சிறப்பு மானிய தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us