sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

/

 பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

 பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

 பயிர் காப்பீடு திட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : நவ 14, 2025 10:42 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பயிர் காப்பீடு பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால், கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா' நிறுவனத்தின் மூலம், 1 ஏக்கருக்கு, 545 ரூபாய் செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

அதற்கான கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட விபரங்களுடன், இ - சேவை மையங்கள் மூலம் காப்பீடு பெற வேண்டும்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டிருப்பதால், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட விவரங்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

பயிர் காப்பீட்டிற்கான காலஅவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே, பயிர் காப்பீடு பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us