sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

/

ஏரியில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஏரியில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஏரியில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூன் 07, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், ஏரியில் நுாற்றுக்கணக்கான கருவேல மரங்கள் வளர்ந்து காடாக மாறியுள்ளது. இவை ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை வேகமாக உறிஞ்சி, நிலத்தடி நீர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன.

ஏரியில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நீர்வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பனப்பாக்கம் ஏரி பாசன சங்க தலைவர் பி.ஜி.கணபதி கூறியதாவது:

ஏரிக்கு வரத்து கால்வாய் வழியாக குறைந்தளவே தண்ணீர் வந்தடைகிறது. அந்த தண்ணீரும் கருவேல மரங்களால் வேகமாக உறிஞ்சப்பட்டு வறண்டு விடுகிறது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கருவேல மரங்களை அகற்றினால், கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வாய்ப்புள்ளது. தற்போது, தண்ணீர் இல்லாததால், அப்பணிகளை செய்வது எளிதாக செய்ய முடியும். மழைக்காலம் துவங்கிவிட்டால் கடினமாக மாறிவிடும்.

எனவே, மழைக்காலம் துவங்கும் முன், ஏரியை சூழந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us