sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆண்டார்மடம் தடுப்பணையில் கூடுதல் நீரை சேமிப்பது அவசியம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

 ஆண்டார்மடம் தடுப்பணையில் கூடுதல் நீரை சேமிப்பது அவசியம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

 ஆண்டார்மடம் தடுப்பணையில் கூடுதல் நீரை சேமிப்பது அவசியம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

 ஆண்டார்மடம் தடுப்பணையில் கூடுதல் நீரை சேமிப்பது அவசியம் விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 27, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஆண்டார்மடம் தடுப்பணை நிரம்பி வழியும் நிலையில், அங்குள்ள ஷட்டர்களை மூடி, கூடுதல் தண்ணீரை சேமிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, கடந்த 2022ல், 13 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை அமைக்கப்பட்டது. தடுப்பணையில் இருந்து, மேற்கு நோக்கிய பகுதியில், 3 கி.மீ., தொலைவிற்கு மழைநீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக தடுப்பணையில், 11 ஷட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது ஷட்டர்களை திறந்து வைத்தும், குறையும்போது அவற்றை மூடி மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை நிரம்பியது. உபரிநீர் பழவேற்காடு கடலுக்கு சென்றது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஷட்டர்கள் மூடப்படாமல் இருப்பதால், தேங்கியுள்ள தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.

நீர்வளத்துறை அதிகாரிகள், தடுப்பணை ஷட்டர்களை மூடி, வெளியேறும் தண்ணீரை தடுத்து, கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us