/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 12, 2025 01:03 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சி, புளியங்குண்டா கிராமத்தில், இயற்கை உரம் மற்றும், மண்புழு உரம் தயாரிக்க, 2017 -- 18ம் ஆண்டு, 1 லட்சம் ரூபாயில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, நிதி ஒதுக்கப்பட்டு, உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டது.
அதன்வாயிலாக, புளியங்குண்டாவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்த நிலையில், கொரோனாவுக்கு பின், அந்த உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. இதனால்,மண்புழு உரம் தயாரிக்கும் இடம் பாழடைந்து உள்ளது.
தற்போதைய பருவத்தில், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் மண்புழு இயற்கை உரம் தயாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் வாயிலாக, இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
எனவே, இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.