/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 10ம் தேதி விவசாயிகள் நலக்கூட்டம்
/
திருவள்ளூரில் 10ம் தேதி விவசாயிகள் நலக்கூட்டம்
ADDED : ஜன 07, 2025 06:55 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10ம் தேதி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வருவாய் கோட்ட அளவில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில், வரும் 10ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்; மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில், அந்தந்த வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது வேளாண் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும், மாவட்ட அளவிலான கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.