/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : மார் 25, 2025 07:46 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்குகளில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 28ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண, கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.