ADDED : ஏப் 23, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு எல்லையம்மன் மற்றும் சக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம். தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பூ கரகம் ஊர்வலமும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
இரவு 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூகரகத்துடன் கிராமம் முழுதும் வீதியுலா வந்தார். இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாடகமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.