/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா கோலாகலம்
/
கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா கோலாகலம்
ADDED : ஜூன் 10, 2025 11:12 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், குமாரகுப்பம் கிராமத்தில் கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா நடந்தது.
காலை, 9:00 மணிக்கு அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். இரவு, 7:00 மணிக்கு களிமண்ணால் செய்த கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு, 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.