ADDED : அக் 02, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊதுபத்தி தொழிற் சாலையில் தீ விபத்து ஏற்பட்டது .
பெரியபாளையம் அடுத்த , வடமதுரை கிராமத்தில் ஊதுபத்தி மற்றும் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.
தகவல் அறிந்த பெரியபாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.