sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தடையை மீறும் விசைப்படகுகளால் மீனவர்கள் தவிப்பு!: பழவேற்காடில் இரு நாட்களாக தொழில் முடக்கம்

/

தடையை மீறும் விசைப்படகுகளால் மீனவர்கள் தவிப்பு!: பழவேற்காடில் இரு நாட்களாக தொழில் முடக்கம்

தடையை மீறும் விசைப்படகுகளால் மீனவர்கள் தவிப்பு!: பழவேற்காடில் இரு நாட்களாக தொழில் முடக்கம்

தடையை மீறும் விசைப்படகுகளால் மீனவர்கள் தவிப்பு!: பழவேற்காடில் இரு நாட்களாக தொழில் முடக்கம்


ADDED : ஜூன் 30, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: தடையை மீறி விசைப்படகுகள் கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வதால், பழவேற்காடில் மீனவர்களின் தொழில் பாதித்து, வருவாய் இழப்பிற்கு ஆளாகிஉள்ளனர். இதனால், இரண்டு நாட்களாக மீன்பிடி தொழிலை தவிர்த்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில், 15 மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இவர்கள் பைபர் படகுகளை பயன்படுத்துகின்றனர்.

கடற்கரையில் இருந்து, கடலில், 8 --10 நாட்டிகல் மைல் தொலைவிற்குள் வலைகளை வீசி மீன்பிடித்து வருகின்றனர். பழவேற்காடு மீனவப்பகுதியில் விசைப்படகுகள் இல்லை.

அதேசமயம் ஆந்திர மாநிலம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் பழவேற்காடு பகுதிக்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.

விசை படகுகள் கடற்கரை பகுதியில் இருந்து, 12 நாட்டிகல் மைல் தொலைவிற்கு அப்பால் மீன்பிடி தொழில் செய்யவும், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோன்று, கடற்கரை அருகேயும், பைபர் படகுகள் தொழில் செய்யும் இடங்களிலும், அவை வரக்கூடாது என கட்டுப்பாடு இருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகளை மீறி, கடந்த ஒரு வாரமாக பழவேற்காடு மீனவப்பகுதியில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள், கடற்கரை அருகிலேயே மீன்பிடி தொழில் செய்வதுடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் பயன்படுத்துவதாக மீனவர் தெரிவிக்கின்றனர்.

இதனால் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில், மீன்வளம் குறைந்து, வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் விசைப்படகுகளுடன் போட்டிபோட்டு தொழில் செய்ய முடியாமல், மீன்பிடிக்காமல் காலி படகுகளுடன், விரக்தியுடன் கரை திரும்புகின்றனர்.

மீன்பிடி தொழில் பாதித்து வருவாய் இழப்பிற்கு ஆளாகி வருவதால், கடந்த இரண்டு தினங்களாக பழவேற்காடு மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.

அதிகாரிகளை சந்திப்பது, கடலோர மாவட்டங்களில் உள்ள சக மீனவ சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, எச்சரிக்கையை மீறும் விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பழவேற்காடு பகுதி மீனவர்கள் கூறியதாவது:

விசைப்படகுகளில் இன்ஜின் அதிக திறன் கொண்டது. அவற்றின் அருகில் கூட பைபர் படகுகள் செல்ல முடியாது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் வைத்து, அதிக மீன்கள் உள்ள பகுதிகளை துல்லியமாக கணித்து, அவற்றை பிடிக்கின்றனர்.

மீன்பிடி தடைகாலங்களில் பைபர் படகுகளில் சென்றபோது, நல்ல மீன்வரத்து இருந்தது. தடைகாலம் முடிந்த பின், விசைப்படகுகள் வருகையால் பைபர் படகுகளுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.

விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும்போது, மீன்வளம் அதிகளவில் பாதிக்கிறது. இவற்றை மீன்வளத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us