sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்

/

திருத்தணி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்

திருத்தணி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்

திருத்தணி அருகே மூன்று கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்


ADDED : ஜூலை 11, 2025 09:37 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி அருகே, மூன்று கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் விஜய், 29, விக்னேஷ், 30.

இவர்கள், பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று மதியம் நகரி வழியாக பள்ளிப்பட்டுக்கு, ரெனால்ட் காரில் சென்றனர். காரை, விஜய் ஓட்டிச் சென்றார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடி அருகே சென்ற போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இன்னோவா கார், இவர்களது காரில் நேருக்கு நேர் மோதியது. சிறிது நேரத்தில், நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மற்றொரு இன்னோவா கார், இந்த இரு கார்களின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் விஜய், விக்னேஷ், இன்னோவா காரில் வந்த சென்னை, பெருங்களத்துாரைச் சேர்ந்த முகுந்தன், 61, அம்பத்துாரைச் சேர்ந்த வரதராஜ், 53, மற்றொரு இன்னோவா காரை ஓட்டி வந்த ஓட்டுநர் என, ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஐந்து பேரையும் அங்கிருந்தோர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us