sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

/

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : அக் 27, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: பூண்டியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரம் உள்ள 30 கிராம மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை நகரின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. நீர்மட்டம் 35 அடி. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியற்றால், தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 15ம் தேதி, பூண்டி மதகுகள் வழியே, 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின் படிப்படியாக, 9,500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 2.620 டி.எம்.சி., நீர்மட்டம், 33.20 அடி. இணைப்பு கால்வாய் வழியே, 300 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.

மழைநீர் வினாடிக்கு, 5,500 கன அடி, கிருஷ்ணா நீர், 100 கன அடி என, மொத்தம் 5,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள 16 மதகுகளில், ஐந்து மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஒதப்பை, பீமன்தோப்பு, மணலி, மணலிபுதுநகர், எண்ணுார் உள்ளிட்ட, 30 கிராம மக்களுக்கு, கலெக்டர் பிரதாப் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us