/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணம் வைத்து சீட்டாடிய நால்வர் கைது
/
பணம் வைத்து சீட்டாடிய நால்வர் கைது
ADDED : மே 08, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லாபுரம்:எல்லாபுரம் ஒன்றியம், அத்திவாக்கம் கிராமத்தில், பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கிராமத்தின் ஆலமரத்தின் கீழ் ஒரு கும்பல் சீட்டாட்டம் விளையாடியது தெரிந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்மன், 40, கந்தன், 43, தாஸ், 37, குமார், 31 என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

