sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ்சில் கஞ்சா கடத்திய நால்வர் சிக்கினர்

/

பஸ்சில் கஞ்சா கடத்திய நால்வர் சிக்கினர்

பஸ்சில் கஞ்சா கடத்திய நால்வர் சிக்கினர்

பஸ்சில் கஞ்சா கடத்திய நால்வர் சிக்கினர்


ADDED : டிச 26, 2024 06:39 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் சில நாட்களாக கஞ்சா கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது.

வாகன சோதனை


இதையடுத்து, எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின்படி, தனிப்படை அமைத்து, தமிழக - ஆந்திரா எல்லையான திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில், தனிப்படை மற்றும் திருத்தணி போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்திய போது, திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும், அரசு பேருந்து மற்றும் திருப்பதி இருந்து, சென்னை செல்லும் அரசு பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, மொத்தம், 25 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், காவனுார் தாலுகா, சிறுவஞ்சூர் தினேஷ், 21, தைலாவரம் விஜய், 19, கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம், பிரதீப்குமார், 21 மற்றும் சென்னை திருவேற்காடு பாஸ்கர், 27, ஆகிய நான்கு பேர் என தெரியவந்தது.

கைது


அவர்கள், திருப்பதியில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் செல்வதற்கு திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து திருத்தணி போலீசார் மேற்கண்ட நால்வரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us