/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை தாக்கிய கும்பல்: சத்தம் கேட்டு மீட்ட போலீசார்
/
வாலிபரை தாக்கிய கும்பல்: சத்தம் கேட்டு மீட்ட போலீசார்
வாலிபரை தாக்கிய கும்பல்: சத்தம் கேட்டு மீட்ட போலீசார்
வாலிபரை தாக்கிய கும்பல்: சத்தம் கேட்டு மீட்ட போலீசார்
ADDED : டிச 08, 2025 06:29 AM

திருமங்கலம்: வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு, காரை மறித்து போலீசார் விசாரித்ததில், பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் ஏழு பேர் கும்பலால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது.
ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் தர்மராஜ், 31. இவர், திருமங்கலம், அவ்வை தெருவில் வாஷிங்மிஷன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
கடை அருகே, நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றபோது, காரில் வந்த மூவர் தர்மராஜை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.
கோவளம் அருகில் உள்ள தனியார் விடுதியில் வைத்து சரமாரியாக தாக்கி, அவர்கள் சொல்லும்படி பேச வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
பின், நேற்று முன்தினம், ஏழு பேர் கும்பல், மீண்டும் அவரை காரில் ஏற்றி, கிழக்கு கடற்கரை அக்கரை சிக்னல் நோக்கி கடத்தி சென்றனர்.
அப்போது, காரில் இருந்து தர்மராஜ் சத்தம் போடவே, சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், காரை மடக்கி பிடித்து தர்மராஜை மீட்டு, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
காரில் இருந்த ஐந்து பேர் சிக்கிய நிலையில், இருவர் தப்பியோடினர்.
திருமங்கலம் பகுதியில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளதால், தர்மராஜ் மற்றும் பிடிபட்ட ஐந்து பேரையும், திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தர்மராஜை கடத்தியது பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீஜி 30, பிரேம்குமார் 36; வேணுகோபால் 30, வானகரத்தைச் சேர்ந்த யுவராஜ் 36, மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் 25, என்பது தெரிந்தது.
இவர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக தர்மராஜிடம் பணத்தை கொடுத்திருந்ததும், பணத்தை திரும்ப தராததால் அவரை கடத்தி, பணம் கேட்டு தாக்கியதும் தெரிந்தது.
அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்கு பின் ஐந்து பேரையும் நேற்று சிறையில் அடைத்தனர். இதில், ஆனந்த் மற்றும் வேணுகோபால் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன.

