/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கங்கையம்மன் ஜாத்திரை விழா மூன்று ஊராட்சிகளில் விமரிசை
/
கங்கையம்மன் ஜாத்திரை விழா மூன்று ஊராட்சிகளில் விமரிசை
கங்கையம்மன் ஜாத்திரை விழா மூன்று ஊராட்சிகளில் விமரிசை
கங்கையம்மன் ஜாத்திரை விழா மூன்று ஊராட்சிகளில் விமரிசை
ADDED : மே 20, 2025 09:54 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மாம்பாக்கசத்திரம் மற்றும் தாடூர் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு முக்கோட்டி அம்மன், கங்கையம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்தார்.
இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. அதேபோல், திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்திலும் கங்கையம்மன் ஜாத்திரை விழா மற்றும் பூகரகத்துடன் அம்மன் வீதியுலா வெகு விமரிசையாக நடந்தது.
இதில் தாடூர், மாம்பாக்கசத்திரம், அருங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.