sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிருதலாபுரம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி அட்டகாசம்

/

கிருதலாபுரம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி அட்டகாசம்

கிருதலாபுரம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி அட்டகாசம்

கிருதலாபுரம் வனப்பகுதியில் கழிவுகள் கொட்டி அட்டகாசம்


ADDED : பிப் 03, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்,: சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அட்டப்பாளையம் - கிருதலாபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

இங்கு தைலம், புங்கம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. அட்டப்பாளையம், கிருதலாபுரம், அல்லிமேடு கிராமங்களில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக இது இருக்கிறது. காட்டுப்பகுதியில் வனவிலங்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட வனப்பகுதியை அழிக்கும் வகையில், வெளியிடங்களில் இருந்து பிளாஸ்டிக், பைபர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிக்கப்படுகிறது.

இவை எரியும்போது, கரும்புகை வெளியேறுவதால், கிராமவாசிகளின் சுகாதாரம் பாதிக்கிறது.

மேலும், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், பயன்பாடு இல்லாத எண்ணெய் கழிவுகள் ஆகியவையும் இங்கு கொட்டப்படுகிறது.

மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. எண்ணெய் கழிவுகளால் காட்டு மரங்களின் வளர்ச்சி பாதித்து அவை காய்ந்து கருகி வருகின்றன.

வனப்பகுதியின் நிலப்பரப்பு பாழாகி வருகிறது. வனப்பகுதியில் கழிவுகளை கொட்டி அட்டகாசம் செய்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us