sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயன்பாட்டிற்கு வராத உரக்கிடங்கு சாலையோரம் குவிக்கப்படும் குப்பை

/

பயன்பாட்டிற்கு வராத உரக்கிடங்கு சாலையோரம் குவிக்கப்படும் குப்பை

பயன்பாட்டிற்கு வராத உரக்கிடங்கு சாலையோரம் குவிக்கப்படும் குப்பை

பயன்பாட்டிற்கு வராத உரக்கிடங்கு சாலையோரம் குவிக்கப்படும் குப்பை


ADDED : பிப் 01, 2025 12:56 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் இரண்டு டன் குப்பை சேகரமாகி வருகிறது.

இதையடுத்து, வெள்ளேரிதாங்கல் செல்லும் சாலையில், அரசு நிலத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 24 லட்சம் மதிப்பீட்டில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.

இந்த உரக்கிடங்கு வாயிலாக, மக்கும், மக்காத குப்பை என, தரம் பிரிக்கப்பட்டு, குப்பையிலிருந்து உரம் தயாரித்து விற்கும் நோக்கில் துவக்கப்பட்டது.

ஆனால், இந்த உரங்கிடங்கு அருகே உள்ள கன்னியம்மன் நகரைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால், உரக்கிடங்கு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, தற்போது ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம், அரசு நிலத்தில் குப்பை குவித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு குவித்து வைக்கப்படும் குப்பை, கொடுங்கையூர் கிடங்கிற்கு அனுப்பும் பணி நடந்து வந்த நிலையில், தற்போது அனுப்பும் பணி தடைபட்டது.

இதனால், நெடுஞ்சாலையோரம் உள்ள கிடங்கில், மலைபோல் குவிந்து வரும் குப்பையால் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெங்கத்துார் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us