/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாமல் பாழாகும் ஞானமுருகன் கோவில் குளம்
/
பராமரிப்பில்லாமல் பாழாகும் ஞானமுருகன் கோவில் குளம்
பராமரிப்பில்லாமல் பாழாகும் ஞானமுருகன் கோவில் குளம்
பராமரிப்பில்லாமல் பாழாகும் ஞானமுருகன் கோவில் குளம்
ADDED : நவ 09, 2024 01:28 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் அழகிய குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தின் உட்புறத்தை சுற்றி, புதர்கள் மண்டியுள்ளன. படிகற்கள் தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் படர்ந்துள்ளன. குளத்தின் வெளிபுறத்தில் குப்பைகள் குவிக்கப்படுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
குளத்தின் தெற்கு திசையில் இருந்த சுற்றுச்சுவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மற்ற திசைகளில் உள்ள சுற்றுச்சுவரும் விரிசல் கண்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
கும்மிடிப்பூண்டி பகுதியின் முக்கிய நீர் ஆதாரம் மட்டுமின்றி, அப்பகுதி ஆன்மிக அன்பர்கள் பெரிதும் போற்றப்படும் அந்த குளம் தற்போது சீரழியும் நிலையில் உள்ளது. குளத்தில் உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.