sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அடுத்தடுத்த 4 கடைகளில் ஆட்டை 'பலே' முந்திரி திருடனுக்கு வலை

/

அடுத்தடுத்த 4 கடைகளில் ஆட்டை 'பலே' முந்திரி திருடனுக்கு வலை

அடுத்தடுத்த 4 கடைகளில் ஆட்டை 'பலே' முந்திரி திருடனுக்கு வலை

அடுத்தடுத்த 4 கடைகளில் ஆட்டை 'பலே' முந்திரி திருடனுக்கு வலை


ADDED : டிச 28, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது துராபள்ளம் பஜார். நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து மூட்டையை தோள் மீது துாக்கிக்கொண்டு பஜார் பகுதியில், சாவகாசமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, ரோந்து சென்ற ஆரம்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகம், அந்த நபரிடம் 'மூட்டையில் என்ன?' என கேட்டுள்ளார். உடனே, அந்த நபர் மூட்டையை கீழே போட்டு, சாலையோர புதருக்குள் புகுந்து தப்பி ஓடினார்.

மூட்டையில் முந்திரி பாக்கெட்டுகளுடன் மளிகை பொருட்கள் இருந்தன. இதையடுத்து, அப்பகுதி கடை உரிமையாளர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில், அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதில், தீபா, 45, என்பவரின் பாத்திரக்கடையில் 2,000 ரூபாய்; பிரகாஷ், 40, என்பவரின் டீக்கடையில், 500 ரூபாய்; ரியாஸ், 40, என்பவரின் மொபைல் போன் கடையில் 500 ரூபாய்; ஏழுமலை, 60, என்பவரின் மளிகை கடையில், 6,000 ரூபாய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து முந்திரி மூட்டை வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us