ADDED : பிப் 11, 2025 12:11 AM

திருவள்ளூர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் திவ்யா தலைமை வகித்தார். இதில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
இதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு அமல்படுத்த வேண்டும்.
ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
அரசு காலி பணியிடங்களை பூர்த்தி செய்து, இளைஞர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் அளித்த, அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

