sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'பம்பு செட்' இயக்கும் கருவி விவசாயிகளுக்கு அரசு மானியம்

/

'பம்பு செட்' இயக்கும் கருவி விவசாயிகளுக்கு அரசு மானியம்

'பம்பு செட்' இயக்கும் கருவி விவசாயிகளுக்கு அரசு மானியம்

'பம்பு செட்' இயக்கும் கருவி விவசாயிகளுக்கு அரசு மானியம்


ADDED : அக் 24, 2024 01:33 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 'மொபைல்' போனில் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகள் இரவு மற்றும் மழை காலத்தில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, பாம்பு, விஷ பூச்சி கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், தங்கள் பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி வேளாண் பொறியியல் துறை வாயிலாக, மானியத்தில் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், படிங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us