/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
526 ஊராட்சிகளில் 26ல் கிராம சபை கூட்டம்
/
526 ஊராட்சிகளில் 26ல் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 20, 2025 11:49 PM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், வரும் 26ம் தேதி, காலை 11:00 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக 2025- - 26ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.