sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிராம சபை கூட்டம் 23ம் தேதி ஒத்தி வைப்பு

/

கிராம சபை கூட்டம் 23ம் தேதி ஒத்தி வைப்பு

கிராம சபை கூட்டம் 23ம் தேதி ஒத்தி வைப்பு

கிராம சபை கூட்டம் 23ம் தேதி ஒத்தி வைப்பு


ADDED : மார் 15, 2025 06:52 PM

Google News

ADDED : மார் 15, 2025 06:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22ல் நடக்க இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில், வரும் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் உலக தண்ணீர் தினம் காரணமாக, கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.

உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதரபொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம சபை கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கலாம். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us