ADDED : அக் 12, 2025 10:20 PM
புல்லரம்பாக்கம்:புல்லரம்பாக்கம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், தம்பி மகன் தாக்கப்பட்ட வழக்கில், பெரியப்பாவை போலீசார் கைது செய்தனர்.
புல்லரம்பாக்கம் அடுத்த ராமன்தண்டலத்தைச் சேர்ந்தவர் தென்னரசு, 23. இவர், சகோதரன் அன்பரசு, 24, என்பவரிடம், 10,000 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். கடந்த 11ம் தேதி மதியம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, வீட்டிலிருந்த குத்து விளக்கால் தென்னரசுவை தாக்க வந்தார். அப்போது, தவறுதலாக தென்னரசுவின் இரண்டு வயது மகன் தாக்கப்பட்டார். தலையில் படுகாயமடைந்த சிறுவன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, தென்னரசு அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார், அன்பரசுவை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர்.