ADDED : ஏப் 10, 2025 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூரில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பெரியகடம்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கஸ்துாரி, 63 என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரிந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கஸ்துாரியை கைது செய்தனர்.