/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம் 447 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 04, 2025 11:09 PM
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 447 மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நிலம் சம்பந்தமாக 70, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலை வாய்ப்பு வேண்டி 81, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி ஐந்து, இதர துறை 191 என, மொத்தம் 447 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.