sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூன் 02, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 118, பாதுகாப்பு திட்டம் 66, வேலைவாய்ப்பு வேண்டி 63, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 35 மற்றும் இதரதுறை 92 என, மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, நீரில் மூழ்கி பலியான இருவரின் குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.

மேலும், திருப்பாலைவனம் ஊராட்சி செஞ்சி அம்மன் நகரில், 'தாட்கோ' வாயிலாக புதிதாக கட்டப்பட்ட 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சமுதாயக் கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, சுயஉதவிக் குழுவினருக்கு ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வெங்கட்ராமன், தனித் துணை கலெக்டர் பாலமுருகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us