sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்தியவர் கைது

/

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது


ADDED : டிச 12, 2024 11:28 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி.,சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்திச் சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன், 40 என்பது தெரியவந்தது.

காரை சோதனை செய்ததில், ஹான்ஸ் 89 கிலோ, விஐ 35, சுவாகத், 3, விமல், 165 என, மொத்தம், 292 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.

ஊத்துக்கோட்டை போலீசார் ஜெயபாலனை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். புகையிலைப் பொருட்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us