ADDED : டிச 18, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திர மாநிலம், நகரி, புத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், திருத்தணி நகருக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில், போலீசார் சோதனை செய்தனர்.
பேருந்தில், ஒரு பயணியிடம் பையில் மறைத்து வைத்திருந்த, 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், லட்சிரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுமலிராஜ்பாபு, 45, என, தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.