sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை சோழவரம் ஏரியில் தண்ணீர் திறப்பு

/

 திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை சோழவரம் ஏரியில் தண்ணீர் திறப்பு

 திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை சோழவரம் ஏரியில் தண்ணீர் திறப்பு

 திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை சோழவரம் ஏரியில் தண்ணீர் திறப்பு


ADDED : நவ 17, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்: சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 10ம் தேதி 0.79 டி.எம்.சி., தண்ணீர் தேங்கியிருந்தது.

ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி முதல், சென்னையின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 200 கன அடி வீதம் புழல் ஏரிக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவற்றிற்கு, விநாடிக்கு, 450 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

நீர்வளத்துறையினர் தொடர்ந்து சோழவரம் ஏரியை கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us