sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் பலத்த மழை ராஜகோபுரம் அருகே மண் அரிப்பு

/

திருத்தணியில் பலத்த மழை ராஜகோபுரம் அருகே மண் அரிப்பு

திருத்தணியில் பலத்த மழை ராஜகோபுரம் அருகே மண் அரிப்பு

திருத்தணியில் பலத்த மழை ராஜகோபுரம் அருகே மண் அரிப்பு


ADDED : நவ 03, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் துாறல் மழை பெய்தது. நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திருத்தணியில் கனமழை பெய்தது.

இதனால், சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தெருக்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து, ஆறாக ஓடியது. தொடர்ந்து, அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே மக்கள் முடங்கினர்.

முருகன் மலைக்கோவிலில் ராஜேகோபுரத்திற்கும் தேர்வீதிக்கும் இடையே இணைப்பு படிகள் அமைப்பதற்காக, மண் கொட்டி சமன்படுத்தப்பட்டிருந்த மண், மழையால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் மேலும் காலதாமதம் ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதே போல் திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us